அனுரகுமார வெற்றி : ஆணைக்குழு அறிவித்தது!

 


நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக திரு அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தைப் பெறாததால் தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ண வேண்டியிருந்தது

No comments