ரணில் துரோகி:பொதுவேட்பாளர் தோற்கார்-சி.வி!
ரணிலை இன்னும் நம்புவதற்கு நாம் தயாரில்லை, அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் போட்டியில் வெல்ல வேண்டும் என்று வரவில்லை என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார். இவர்களில் யார் நல்லவர் என்று சொல்லமுடியாத நிலை உள்ளது. அவர்கள் இருவரும் சிங்கள பௌத்த எண்ணத்தில் ஊறி இருப்பவர்கள். அதில் இருந்து வெளியே வரக்கூடியவர்களாக அவர்கள் இல்லை.
தமிழ் பொது வேட்பாளர் போட்டியில் வெல்லவேண்டும் என்று வரவில்லை. எங்கள் மக்களின் பிரச்னைகளை உலகறியச் செய்யவேண்டும் என்பதற்காகவே அவரை முன்னிலைப்படுத்துகிறோம்.
இதில் தோற்றுப்போக எதுவும் இல்லை. தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் அபிலாஷைகள் என்ன என்பதை தெரியப்படுத்தும் நிலையை நாம் உண்டாக்க முடியும். இதுதான் எங்கள் பலம் எங்கள் கணிப்பு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment