அல்லக்கைகளிற்கும் பெறுமதி!



தனக்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆட்கள் வருவதாக ரணில் பிரச்சாரப்படுத்திவருகின்ற நிலையில் அல்லக்கை சில்லக்கையெல்லாவற்றிற்கும் பெறுமதி கிட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என தெரிவித்து இன்று ஒருவர் ரணில் அணியில் இணைந்து புதிய பதவி பெற்றுள்ளார்.

இதனிடையே இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும் என அவர் புதிய விளக்கமளித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி நேற்று (21) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.


No comments