குழி தோண்டி புதைக்க சதி!
தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையிலே, தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பற்றி கட்சியாக எந்தவித தீர்மானத்தையும், இதுவரைக்கும் எடுக்கவில்லை.
பொதுவேட்பாளர் குறித்த தமிழரசுக்கட்சியின் முடிவு குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11)அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்ட அரிய நேத்திரன் இரா.சாணக்கியனிடம் தோல்வியடைந்திருந்தார்.
இந்நிலையில் பெர்துவேட்பாளராக அரியநேத்திரனின் மீள்வருகை மட்டக்களப்பில் இரா.சாணக்கியனின் வாக்கு வங்கியை பாதிக்குமென நம்பப்படுகின்றது.
Post a Comment