ஓகஸ்ட் முதல் மீண்டும் யாழ்தேவி



யாழ்ப்பாணம்-கொழும்பு புகையிரத சேவை மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் ஆரம்பமாகுமென தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம்  புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாஹோ-  அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது புதிய புகையிரத பாதை மாஹோ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய புகையிரத பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த வீதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி  திறந்து வைக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக இந்திய உதவியுடன் மாஹோ -வவுனியா –காங்கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டதுடன் தற்போது மாஹோ –அனுராதபுரம் வரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


No comments