அள்ளிக்கொட்டப்படும் நிதி!
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்ட நிதி கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்டுவருகின்றது.அதன் ஊடாக தேர்தல் அறிவிப்பின் பின்னராக மக்களது வாக்குகளை நிதி ஒதுக்கீட்டை காரணங்காட்டி பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தேர்தல் அறிவிப்பின் பின்னராக அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது எனவும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment