மீன்வளர்க்க பழகும் டக்ளஸ்!



இந்திய கடலில் மீன்கள் இல்லையென தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் படையெடுத்துவருகின்ற நிலையில் அரச மீன்பிடி அமைச்சர் மீன்பிடி வித்தைகளை அறிய இந்தியா சென்றுள்ளார்.

ஆந்திரா மாநிலத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் ராமகுண்டம் எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கூட்டில் மீன்வளர்க்கும் முறைமையை பார்வையிட்டுள்ளார். 

இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். மீன் குஞ்சுகள் பெருக்கம், அறுவடை  மற்றும் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிநதுள்ளாராம்.

அதேபோன்று ஆந்திரா மாநிலத்தில் இராஜமந்திரி எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இறால் இனப்பெருக்க நிலையம் , அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றைவும் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். 

இரண்டு வகையான திட்டங்களை வெற்றிகரமாக இலங்கை பண்ணையாளரகளுக்கும் ஊக்குவிப்புச் செய்வதன் ஊடாக பண்ணையாளர்கள் கூடுதல் நன்மையை அடைவார்கள் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடலட்டை பண்ணைகளென கடற்கரைகள் விற்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீன்பண்ணைகளென கடற்பகுதிகள் பறிபோக திட்டமிடப்படுகின்றது.


No comments