ரஷ்யாவில் பயங்கரவாதத் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 பேராக உயர்வு
ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று இரவு பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். பயங்காரவாதிகள் ஒருகிணைந்து இந்த தாக்குதலை நடத்தினர்.
கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், நிகோலாய் கோடெல்னிகோவ் என்ற மதபோதகரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர் மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்திவிட்டுச் சென்றனர்.
அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் 15 காவல்துறையினர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்த நகரங்களுக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர். பயங்கரவாதிகள் மற்றம் பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நள்ளிரவுவரை தொடர்ந்தது. பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதல்களில் இதுவரை நான்கு பொதுமக்கள் 15 காவல்துறையினர் என மொத்தமாக19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாகெஸ்தான் மூன்று நாட்கள் துக்கத்தை அறிவித்தது. தாகெஸ்தானில் சிவப்பு கார்னேஷன்களுக்கு முன் இறந்த காவல்துறையினரின் படங்கள் தெருவில் வரிசையாக வைக்கப்பட்டன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மாஸ்கோ குரோகஸ் கச்சேரி அரங்கில் 145 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கே என்ற அமைப்பு உரிமை கோரியது.
அக்டோபரில், காசாவில் போர் வெடித்த பிறகு, கலகக்காரர்கள் பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கண்ணாடி கதவுகளை உடைத்து, டெல் அவிவ் விமானத்தில் இருந்து வந்த யூதப் பயணிகளைத் தேடுவதற்காக மகச்சலா விமான நிலையம் வழியாகச் சென்றனர்.
ஜூன் 24-26 திகதிகளில் தாகெஸ்தானில் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடிகள் அரைக்கம்பத்தில் தாழ்த்தப்பட்டு அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டன.
Post a Comment