மகிந்தவின் பாதுகாவலர் உக்ரேனில் சண்டையில்!



இறுதி யுத்தகாலத்தில் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளது ஆயுதங்கள் உக்ரேனிற்கு விற்கப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்ற ஆதாரம் வெளிவந்துள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உக்ரைன் படையில் வெளிநாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட குழுவின் தலைவராக அவர் செயற்படுவதாக கூறப்படுகின்றது. 

கொழும்பில் மூண்ட கோத்தபாய அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக பணியாற்றியதாக தெரியவந்துள்ளர்.

கடந்த எட்டு மாதங்களாக எந்தவொரு பாதிப்புகளும் இன்றி போர்களத்தில் செயற்பட்டு வருவதாகவும் தான் ஒருபோதும் கூலிப்படையாக இணையவில்லை. எனது முழு விருப்பத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன். எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் இருந்து நான் அதிகாரப்பூர்வமாக விலகவில்லையெனவும் முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.


No comments