கைதானவர்கள் யார்?



இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஸ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் காவல்துறையினர்; இருவரையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் பொருளாதார அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.எனினும் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments