முள்ளிவாய்க்காலில் பிதிர்கடன்!



யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் இன்றைய தினம் இறுதி யுத்த சாட்சியமாக இருந்த கப்பலடியில் இடம்பெற்றிருந்தது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்திலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இன்றையதினம் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.

குறித்த பிதிர்கடன் வழிபாட்டில் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் உறவுகளை இழந்த பெரும்திரளான மக்கள் வருகைதந்து இறந்தவர்களின் பெயர் கூறி பிதிர் கடனை நிறைவேற்றியிருந்தார்கள்.

No comments