ரணிலுக்கு பச்சைக்கொடி:தூக்கினார் சுமா!
2005 இல் ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டமைப்பு உறவை காண்பிக்க ஈபிடிபி கட்சி வெளியே கடந்த காலங்களில் இருந்திருந்தது.ஆனால் சூழல்மாறி போட்டி போட்டு ரணில் விக்கிரமசிங்கவை இரு தரப்பும் இன்று யாழில் வரவேற்றுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
2005 இல் உங்கள் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் வட. மாகாணத்தின் அபிவிருத்திக்காக பல பணிகளை செய்துள்ளதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி காலத்தில் வெளியே இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது கூட்டமைப்புடன் பங்கெடுத்திருந்தார்.
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 372 பயனாளிகளுக்கான காணி உறுதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று கையளிக்கப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வரவேற்பில் பங்கெடுத்திருந்தனர்.
Post a Comment