கடல் கொந்தளிப்பு:திருமலையில் மீனவர்களை காணோம்
இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிற்கான பயணிகள் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே திருகோணமலை சல்லிக்கடற்கரையிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை 21ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற சல்லிப் பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிலுள்ளனர்.
குட்டிராசா சசிகுமார்(44), முருகையா சுஜாந்தன்(32) ஆகிய இரு மீனவர்களுமே காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களால் காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது காலநிலை சீரின்மையால் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் தேடுதலில் ஈடுபடுவதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தொடர்ந்தும் கடற்பகுதி அதிக கொந்தளிப்பான நிலையில் உள்ளதால் தேடுதல் முயற்சிகள் சற்று தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment