இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!


இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஈரான் விழிப்புடன் இருப்பதாக கூறுகிறார்.

நாட்டின் வானத்தில் சந்தேகத்திற்கிடமான பறக்கும் பொருட்கள் தோன்றினால், அவை நமது சக்திவாய்ந்த வான் பாதுகாப்பால் குறிவைக்கப்படும் என்று அவர் தெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக அவர் தெரிவித்த கருத்தை ஈரானிய அரச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments