மலேசியாவில் உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியது: 10 பேர் உயிரிழப்பு


மலேசியாவில்  இராணுவ உலங்கு வானூர்திகள் அணிவகுத்துச் சென்றபோது இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியதில் அதில் இருந்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு உலங்கு வானூர்திகளும் நடுவானில் மோதி தரையில் விழுந்து நொருங்கும் காணொளிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ரோயல் மலேசியன் கடற்படைத் தளம் அமைந்துள்ள நகரமான லுமுட்டில் உள்ளூர் நேரப்படி காலை 9.30 க்கு இந்தச் சம்பவம் நடந்தது.

மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.


No comments