கார்த்திகை பூ தெரியாது ?
யாழ்ப்பாணத்தில் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்தில் காந்தள் பூவையே அலங்கரித்தோம் எனவும் அதனை கார்த்திகை பூ என்று எமக்கு தெரியாது என காவல்துறையினருக்கு மாணவர்கள் பதிலளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் கவச வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் (30) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னெடுத்த மாணவர்கள் விசாரணைகளை எதிர்நோககியுள்ளனர்.
இதனிடையே பாடசாலை மட்ட நிகழ்வுகளில் காவல்துறையினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக - குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் காவல்துறையினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும் எனவும் தெரிவித்துள்ளது
தெல்லிப்பழை காவல்துறையினர் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று(31) விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.
வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment