கச்சதீவு:சீனாவும் கச்சை கட்டுகின்றது!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விவகாரம் தொடர்பில் சீன தலையீடு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கச்சதீவு அறிக்கை, இலங்கை மீது இந்தியா முறையாக உரிமை கோரும் வாய்ப்பை எழுப்பியுள்ளதாக சீனாவின் அரச செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கச்சதீவை சுற்றியுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் உரிமையை திரும்பக் கோரப்படும் என்ற எதிர்வையும் அவரின் அறிக்கை உருவாக்கியுள்ளதாகவும் சீன பத்திரிகை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் கடல் எல்லையில் அமைந்துள்ள கச்சதீவு உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டாம் என கொழும்பில் உயர் ஸ்தானிகர்களாக பணியாற்றிய முன்னாள் இந்திய இராஜதந்திரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் ஆகியோர் எச்சரித்துள்ளதாக சீன செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பெரிய இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும், இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கச்சதீவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று இந்தியா மறுதலித்துள்ளது.
Post a Comment