யாழில். காதலியையும் , தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு


இளைஞன் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாய் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளார் .

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

இளைஞனும் அப்பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் , இன்றைய தினம் அதிகாலை வேளை காதலியின் வீட்டுக்கு சென்று மறைந்திருந்த இளைஞன் , வீட்டார் காலை வீட்டின் கதவை திறந்த வேளை , வீட்டினுள் நுழைந்து , காதலியையும் , அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் வெட்டு காயங்களுடன் காணப்பட்ட தாயையும் மகளையும் மீட்டு , வைத்தியசாலைக்கு அனுமதி வைத்துள்ளனர். 

அந்நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த காணி ஒன்றில் காதலியையும் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments