கப்பல் மோதி பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்தது!!


அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது பெரிய சரக்குக் கப்பல்

ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதியது. இதனால் பாலம் இடிந்து வீழ்ந்தது. 

விபத்தின் போது அப்பாலத்தின் வழியாகப் பயணித்தவர்கள் கடலில் வீழ்ந்தனர். கடலில் வீழ்ந்தவர்களை தேடும் பணி தொடர்கிறது. இதில் வாகனங்கள் நீரில் விழுந்ததில் சிக்கி தவித்து வரும் 7 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வீழ்ந்தவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்கள் பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இதேபோன்று சில வாகனங்களும் நீரில் விழுந்தன.

இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து பிரிவு தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான அந்த சரக்கு கப்பல் பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது என கடலோர காவல் படையை சேர்ந்த மேத்யூ வெஸ்ட் என்பவர் கூறியுள்ளார்.




No comments