ஆவா சித்தார்த்: பதவியில்லை - ரணில்



யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளராக அருண் சித்தார்த்; என்பவரை தெரிவு செய்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க அறிவித்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும்  உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை புலனாய்வு பிரிவின் முகவரெனவும் ஆவா குழு எனப்படும் பாதாள உலக கும்பலின் தலைவர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சித்தார்த் போதை பொருள் கடத்தலில் கைதான நபர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

 

No comments