கேடுகெட்ட வேலை சரத் செய்யவேண்டாம்!

ரணில் தலைமையிலான கூட்டில் இணைந்து கொள்ள சரத் பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் கட்சியில் இருந்து கொண்டு கேடு கெட்டவேலைகளை செய்யவேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் முயற்சிக்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றம் செல்ல தயாராகி வருவதாக ஊடகவியலாளர்கள் வினவியிருந்தனர்.

அப்போதே திருமதி டயானா கமகேவின் இல்லத்தில் அதிபர் ரணில், பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான கேடுகெட்ட வேலைகளை செய்யாமல் ரணில் தேவையெனில் ரணிலிடம் செல்லுங்கள்.அல்லது கட்சியில் இருந்தால் இணைந்து செயற்படுங்கள் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.

No comments