அயோத்தி இராமர் கோவிலில் நாமல் இராஜபச்ச


இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.

நாமல் இராஜபக்ச அயோத்தி இராமர் கோவில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இராமர் கோவிலில் அவருக்கு சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ச, லக்னோவில் மரியாதை நிமித்தமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.


No comments