ரஷ்யப் படைகளை இழிவுபடுத்துபவர்களின் சொத்துக்களைப் பறிக்கிறது ரஷ்யா
ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளை இழிவுபடுத்துபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கையெழுத்திட்டார்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இராணுவம் பற்றி "வேண்டுமென்றே தவறான தகவல்களை" பரப்பியதற்காக குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளை அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகள் விரைவில் ஒப்புதல் அளித்தன.
அரசாங்கத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் இராணுவத்தைப் பற்றிய வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புதல், பணம், மற்றுக்கள் சொத்துக்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை இழக்க நேரிடும் என்று அச்சுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களை குறிவைக்கிறது.
Post a Comment