காணி விடுவிக்க மீண்டும் கடிதம்!



யுத்த முடிவுற்றதாக அரசு அறிவித்து 14வருடங்கள் கடந்துவிட்ட போதும் பலாலி உயர்பாதுகாப்பு வலயமென நில ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுவன் காசியம்பாள்  சிறீ முத்துமாரி அம்மன்  ஆலயத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு ஆலயம் சார்பாக கோரிக்கையை நாளை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1990 ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சென்ற பின்னர் ஆலயம் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்; வீதியோரத்தில் உள்ள விசேட நாட்களில் பூசைகள் இடம்பெறுகிறது. 

1990 ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால் மக்கள் இடம்பெயர்ந்தததையடுத்து உயர் பாதுகாப்பு வலயமாகியதால்   ஆலயங்கள் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ளது. 

இதேவேளை  விரைவில் வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து ஒருதொகுதி நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது அதில் குறித்த ஆலயம் விடுவிக்கப்படுமா என்ற ஏக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளனர்.


No comments