முன்னாள் நெதர்லாந்துப் பிரதமரும் அவரது மனைவியும் ஒன்றாக கைகோர்தபடி இறந்தனர்1!
நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட், தனது அன்பு மனைவி யூஜெனியுடன் கைகோர்த்து கருணைக்கொலை மூலம் இறந்தார். அவர்கள் இருவருக்கும் 93 வயது.
இந்த இந்த இருவரும் சில காலமாக சுகவீனம் அடைந்திருந்தனர்.
2019ஆம் ஆண்டு பாலஸ்தீனயர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது வான் அக்ட் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் முழுமையாகக் குணமடையவில்லை. அவரின் பேசும் திறன் குறைவடைந்தது.
1977 ஆண்டு முதல் 1982 ஆண்டுவரை இருந்த நெதர்லாந்தின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வான் அக்ட் தனது பிற்காலத்தில் தொடங்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பான ரைட்ஸ் ஃபோரம் வெள்ளிக்கிழமை இரட்டை கருணைக்கொலையை அறிவித்தது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த ட்ரைஸ் வான் ஆக்ட் மற்றும் அவரது மனைவி யூஜெனியும் கை கோர்தபடி இறந்தனர். இவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வு நடந்தது முடிந்தது. இந்த வாரம் நிஜ்மேகன் நகரில் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது தி ரைட்ஸ் ஃபோரம் ஒரு அறிக்கையில் கூறியது.
இவர்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
2002 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் இந்தமாதம் 5 ஆம் நாள் கருணைக்கொலைக்கு விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment