அமெரிக்க சூப்பர் பவுல் அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! 21 பேர் காயம்!


அமெரிக்காவின் மிசோரியில் சூப்பர் பவுஸ் வெற்றி அணிவகுப்பின் முடிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 21 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களில் 15 பேருக்கு உயிர் ஆபத்து இருந்ததால் உடனடியாக சிகிற்சை அளிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 9 குழந்தைகளும் உள்ளடங்குவதாக மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. 

நேற்று புதன்கிழமை கன்சாஸ் நகரின் டவுன்டவுன் தொடருந்து நிலையமான யூனியன் ஸ்டேஷனுக்கு மேற்கே வெற்றி அணிவகுப்புக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சத்தத்தால் நகர மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்கள் பதுங்கி ஓடினர்.

அணிவகுப்பைக் கண்காணிக்க 800 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருந்தனர்.

வன்முறையாக மாறிய வாக்குவாதத்தின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது. இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்ல என தெரியவருகிறது.

No comments