ஆட்கொலையில் கருணா பண்ணை?



யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மட்டக்களப்பில் (13) காலை இடம்பெற்றுள்ளது.

தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு சொந்தமான பண்ணையொன்றிலே விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் 51 வயது நபரும், விநாயகமூர்த்தி சுதர்சன் என்னும் 21 வயது இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

சென்ற வருடமும் பண்ணைக்குள் ஏற்பட்ட மின் விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததும், அதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .

காணியானது, விநாயாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுடைய காணி என்றும், அவர் அதனை தன்னுடைய மருமகன் பேரில் குத்தகைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


No comments