துருக்கியில் தங்கச் சுரங்கத்தில் மண் சரிவு: 9 பேரைக் காணவில்லை!!


துருக்கியின் கிழக்கு துருக்கியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது ஒன்பது தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துருக்கியின் மலைப்பகுதியான எர்சின்கான் மாகாணத்தில் உள்ள இலிக் நகருக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை கோப்ளர் சுரங்கத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

சுரங்கத்தில் ஒன்பது தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்று மீட்புக் குழுக்கள் அந்த இடத்தில் பணியில் இருப்பததாக உள்துறை அமைச்சர் அமைச்சர் அலி யெர்லிகாயா கூறினார்.

மீட்புப் பணிக்காக எங்கள் வாகனங்கள், இயந்திரங்கள், மின்பிறப்பாக்கிகள் , இரவு விளக்குகளை நிறுவியுள்ளோம். காணமாமல் போன சகோதரர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் நல்ல செய்தியை வழங்க முடியும் என்று அலி யெர்லிகாயா மேலும் தெரிவித்தார்.

சுரங்கத்தில் சயனைட் கலந்து மண் சரிந்ததால் தேடுதல் பணிகளை கடினமாக்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

சயனைடு என்பது ஒரு இரசாயன கலவையாகும். இது சுரங்கத்தில் நிறைய பாறைகளில் இருந்து சிறிய அளவிலான தங்கத்தைப் பிரித்தெடுக்கச் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்படுகிறது.

அனகோல்ட் மைனிங் 2009 ஆம் ஆண்டு முதல் காப்லர் சுரங்கத்தை இயக்கி வருகிறது. 

No comments