கிளியில் பௌத்த விகாரைக்கு அருகில் தர்ம மண்டபம்!



யாழ்.பலகலைக்கழகத்தை பௌத்த மயமாக்குவதன் மற்றொரு கட்டமாக கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு அருகில் தர்ம மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் கண்ணதாசன், பொறியியல் பீட பீடாதிபதி பிரபாகரன் மற்றும் மகா சங்கநாயக்க தேரர்கள் முன்னிலையில் குறித்த தர்ம மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தபிரானின் வரலாற்று நூல்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்று கூடல், பொது நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தும் வகையில் தர்ம மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பௌத்த மத தலைவர்கள், கிறிஸ்தவ குரு முதல்வர், இஸ்லாமிய மௌலவி, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments