சாவற்கட்டு மீனவர்கள் போராட்டம் யாருக்கெதிராக?



அரச மீன்பிடி அமைச்சரது கெடுபிடிகளிற்கும் கட்டைப்பஞ்சாயத்திற்கும் எதிராக யாழ்ப்பாணம் சாவல்கட்டு மீன்வர்கள் போராட்ட களமிறங்கியுள்ளனர்.

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமான கடற்றொழிலாளர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்திருந்தது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரை சந்தித்த சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை நிறுத்துவோம் என தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த கடற்றொழிலாளர்கள் நன்பகல் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆளுநர் தற்போது யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கி வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் உறுதி மொழி வழங்கியிருந்தார்.

அதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

தமது கிராமத்தில் நிறுவப்படவுள்ள இறங்குதுறையினை தடுத்து நிறுத்த முற்படுவதாக தெரிவித்தே மீனவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.


No comments