வாக்குப்பிச்சை கேட்கிறது ஜேவிபி!



ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களது வாக்குகளிற்காக ஜேவிபி வடகிழக்கில் களமிறங்கியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயகபோராளிகள் கட்சியினருக்குமான சந்திப்பு இன்று காலை யாழ்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் இணைப்பாளர் ம.இளங்குமரன் அவர்களும் ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு எல்லைதாண்டி மீன் பிடி தமிழர் நில கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் குரல் கொடுக்க வேண்டுமென ஜனநாயகப்போராளிகள் கட்சியால்; கோரப்பட்டது.

வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப்போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பிரிப்பு மற்றும் சிங்கள இளைஞர்களை படைகளில் இணைத்து போரில் வெற்றிகொள்ள ஜேவிபி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments