அமைச்சரும் கவலையில்!
தமன்னாவின் காவலியா பாடல் நின்று போனமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சியில் எமது இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்காகவும் அசௌகரியங்களுக்காகவும் அவமானத்திற்காகவும் மனம் வருந்துவதாக அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் எமது பிரதேசங்களில் நடைபெறுகின்றபோது தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவமானது, இசை நிழச்சியை கண்டு இரசிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் ஏற்பாட்டாளர்கள் கலந்துரையாடி அனைத்து விடயங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment