மகிந்த கடல் ஆய்வே செய்கிறார்!
மகிந்த ராஜபக்ச மற்றும் சகபாடிகள் குழு கடலில் ஆய்வு செய்யவே சென்றதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கப்பலில் ஆடம்பர விருந்து ஏற்பாடு செய்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபை கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஆய்வுச் சுற்றுப்பயணம் மட்டுமே என்றும் கூறியுள்ளது.
துறைமுகங்களின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்த சரியான தகவல்களை வழங்குவதற்காக, துறைமுக அதிகாரசபையானது பல்வேறு தலைவர்கள், விஐபிக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உள் மற்றும் வெளி துறைமுகங்களில் இத்தகைய ஆய்வுச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதாக அது கூறியுள்ளது.
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு துறைமுக அதிகாரசபையானது கிழக்கு ஜெட்டி, ஜே.சி.டி முனையம் மற்றும் மேற்கு முனையத்தின் அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காக ஆய்வுச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பிற்கு முன்னதாக ரகசிய சந்திப்பாக மகிந்த பங்கெடுத்த சந்திப்பு பற்றி செய்தி வெளியாகியுள்ளது.
Post a Comment