தமிழரசு கட்சியை காணோம்!



சர்வதேச சமூகத்தை ஏமாற்ற இலங்கை அரசு நல்லிணக்க நாடகமாடுவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் இலங்கை நாடாளுமன்றில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்தார். அதனையடுத்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரியிருந்தனர்.

அதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தன.அரச தரப்பினர் ஆதரவாக  வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், கஜேந்திரன் ஆகிய எம்.பி.க்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சாணக்கியன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம் , கோவிந்தன் கருணாகரம் ஆகிய எம்.பி.க்களுமே எதிர்த்து வாக்களித்தனர்.

எனினும் வழமை போல தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்களை காணவில்லை

இதேவேளை, விவாதத்தில் உரையாற்றும்போதே சட்ட மூலத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான  சரத் வீரசேகர வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.


No comments