சுமந்திரனே ஈபிடிபிக்கும் வேண்டுமாம்!



தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெறவுள்ள நிலையில் புதிய தலைவராக சுமந்திரனே தெரிவு செய்யப்படுவார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தமிழரசு கட்சியை  வழி நடத்திய தலைவர் செல்வநாயகத்துக்கு பின் நெருக்கடியான காலகட்டத்தில் மாவை சேனாதிராஜா  மற்றும் சிவஞானம் வழி நடத்தி வந்தார்கள்.

தற்போது தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கான போட்டி நிலவுகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பொறுத்தவரை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி வழங்கிய ஆசன ஒதுக்கு கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கத்தோலிக்க திருச்சபை வழங்கிய அழுத்தத்தின் காரணமாக அக்கால பகுதியில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றவர்.

அவருடைய நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அக் காலத்தில் காரசாரமான கருத்து மோதல்கள் இடம் பெற்றதாக பேசப்பட்டது .

தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு என்பது ஒரு இணக்கப் பாட்டின் அடிப்படையில் இடம்பெறும் தெரிவாகவே நாம் பார்க்கின்ற நிலையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சிறீதரன் தலைமை பதவித் தெரிவில் இருந்து தானாக பின்வாங்குவார் என்ற கருத்து பலமாக இருக்கிறது எனவும் ஈபிடிபி ஊடகப்பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.


No comments