இந்திய துணைதூதகத்திலும் போலிச்சரக்கா?
இந்தியாவில் டுப்ளிகேட் சரக்கு என அடையாளப்படுத்தப்படும் போலி மதுபானங்கள் சர்வசாதாரணமானது.
ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் தனது ஆதரவாளர்களிற்கு வழங்கிய போலி மதுபானங்களால் ஆதரவாளர்கள் இரண்டுபட்டுப்போயுள்ள பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
வருட இறுதியை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனது ஆதரவாளர்களிற்கு தூதரகத்தில் வைத்து தலா ஒரு மதுபானத்போத்தலை வழங்கி வைப்பது துணைதூதரகத்தின் வழமையாகும்.
நெருங்கிய ஆதரவாளர்களிடை தாண்டி தூதரக விசுவாசிகளான சில பத்திரிகைக்காரர்களும் போத்தல்களை அன்பளிப்பாக பெற்றுக்கொள்வது வழமையாகும்.தூதரக செய்திகளை காவிச்செல்வதற்கு அவ்வாறு அன்பளிப்புக்கள் கிட்டுவது சாதாரணமானதொன்று.
இந்நிலையில் இம்முறை ஆதரவாளர்கள் மற்றும் ஆதரவு பத்திரிகையாளர்கள் சிலர் அழைக்கப்பட்டு போத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் அவை போலி மதுபானங்கள் என சர்ச்சைகள் மூண்டுள்ளது.
இந்நிலையில் தனது அலுவலக செய்தியாளர் ஒருவரிற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு போத்தலை பத்திரிகை உரிமையாளர் தூதரகத்தில் மீள ஒப்படைக்க பணித்து திருப்பியனுப்பிய புதினமும் நடந்துள்ளது.எனினும் அதனை தனது ஊடக நிறுவனத்தின் நிலைப்பாடு எனவும் அன்பளிப்புக்கள் பெறப்படமாட்டாதெனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே இந்திய நலன்களிற்கு முண்டு கொடுக்க மாட்டோம் எனும் முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் தூதரகத்தில வாங்கிய போலி சரக்கினால் முகத்தை தொங்கப்போட்டவாறு திரிகின்றனர் என குசுகுசுப்புக்கள் உலா வருகின்றது.
ஆனாலும் ஆண்களிற்கு ஈடானவர்களென வீரம் பேசியவாறு போட்டி போட்டு போலி சரக்கு வாங்கிய முன்னாள் எம்பியின் வளர்ப்பு மகள் தொடர்பிலும் பலரும் கவலை கொண்டுள்ளனராம்.
முன்னணியோ தூதரகத்துடன் முட்டு மோதுதாக காட்டிக்கொள்ள அவர்களது செல்லப்பிள்ளையோ தூதரகத்தின் அன்னதானங்களை தவறவிடுவதில்லை.இந்நிலையில் தப்பாது அன்பளிப்பாக பெற்ற போலி சரக்கும் பேசுபொருளாகியுள்ளது.
Post a Comment