சுமந்திரனும் குத்துகிறார்!
ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியில் வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள நட்டஈடு வழங்கப்படுமாயின் நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்ச சகோதரர்களிடம் நாட்டிற்கு வெளியில் இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
“நாட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அனைத்து பணத்தையும் கொண்டு வந்து அந்த பணத்தில் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபாய, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுமக்களின் பணம் திருடப்பட்டதால் தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது,” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரியில் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டுமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
திருடிய பணத்தை திரும்பக் கொண்டு வர உத்தரவிடவும், அதனால் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறச் செய்யவும், இழப்பீடு கோருவதற்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருhளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் ராஜபக்சக்களே காரணமென உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment