பாடசாலையில் சுவர் விழுந்து மாணவி உயிரிழப்பு - ஐந்து மாணவர்கள் படுகாயம்


வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில், முதலாம் தர மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதலாம் தரத்தில் கல்வி கற்கும், மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments