இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.   

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சருடன் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments