மன்னாரில் சிக்கிய 10 அடி நீளமான பாம்பு மீன்


மன்னாரில் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் ஒன்று சிக்கியுள்ளது.

குறித்த தொழிலாளி இன்றைய தினம் சனிக்கிழமை மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே மீன் வலையில் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.

பெரும்பாலும் இவ்வகை மீன்கள் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.

அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும். ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

இவ் வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு, உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.





No comments