வட்டுவாகல் பாலம் மூடப்படுகின்றது!





முல்லைதீவு நகரை இணைக்கும் வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.எனவே, அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அறிவித்துள்ளது.

No comments