யாழில். 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இருந்து கடல் வழியாக, படகில் கஞ்சாவை கடத்தி வந்து, அவற்றை முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்து சென்ற போது , வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் , கடத்தலுக்கு பயன்படுத்த்தப்பட்ட முச்சக்கர வண்டியும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments