நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை நெடுந்தீவுக்கு அண்மையில் இரண்டு படகுகளில் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 பேரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களையும் , அவர்களது படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை யாழ். மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments