யாழில் மாட்டிறைச்சியுடன் இரு பெண்கள் கைது


யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சியுடன் இரு பெண்கள், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வாளி ஒன்றினுள் 25 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்ற போது , அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் அவர்களை மறித்து சோதனையிட்ட போது சட்டவிரோதமான முறையில் இறைச்சியை எடுத்து சென்றமையை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் , அவர்கள் எடுத்து சென்ற இறைச்சியையும் மேலதிக நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

No comments