பாரிஸ் விமான நிலையத்தில் 400 குரங்குளின் மண்டை ஓடுகள் பறிமுதல்!!

பிரான்சின் அனைத்துலக விமான நிலையமான பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 400 குரங்குகளின் மண்டை ஓடுகள் பறிமுதல்

செய்யப்பட்டன. சில பொதிகளில் விலங்குகளின் முன் கைகளும் காணப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பரைமேட் மண்டை ஓடுகள் சேகரிப்பாளர்கள், வேட்டை கிளப்புக்காகவும், பரிசுப் பொருட்களாகவும் வழங்கவும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்காலாம் எனக் கூறப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட குரங்குகளின் இனங்களிலிருந்து கடந்த ஆண்டு ஏழு மாதங்களில் (மே முதல் டிசம்பர் 2022 வரை) 392 மண்டை ஓடுகளை பொதியிடப்பட்ட மண்டை ஓடுகளைக் கைப்பற்றியதாக பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் கேமரூனில் இருந்து அனுப்பப்படும் ப்ரைமேட் மண்டை ஓடுகள் தபால் பொதிகள் மூலம் அமெரிக்க முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் பாதுகாக்கப்பட்ட குரங்கு இனங்களின் மண்டை ஓடுகளை விற்பனை செய்வதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் எதுவும் இல்லை என்று சுங்கம் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் மக்கள் கடத்தலுக்குப் பிறகு மிகவும் இலாபகரமான வர்த்தகங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும் இந்த மோசமான வணிகம் ஆண்டுக்கு 8 பில்லியன் முதல் 20 பில்லியன் யூரோக்கள் ($8.5bn முதல் $21.3bn) வரை ஈட்டுகிறது என்று விமான நிலைய சுங்கத் தலைவர் கில்பர்ட் பெல்ட்ரான் செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments