கொடிகாமத்தில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்


தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

குறித்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து  கிளிநொச்சியை வந்தடைந்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.






No comments