கஜேந்திரன் மற்றும் வினோ கைது!



நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று(14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்காத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பிடியாணை வழங்கப்பட்டு கைதாகியுள்ளனர்.

இதனிடையே அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இரவுநேரம் மதுபோதையில் சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான வழக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் முறையாக விசாரிக்க தீர்மானித்த நீதவான், சந்தேகத்திற்குரிய இராஜாங்க அமைச்சரை அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, வழக்கின் முதலாவது சாட்சியான பூபாலசிங்கன் சூரியபாலன் மற்றும் இரண்டாவது சாட்சியான மணியரசன் சுலக்சன் ஆகியோரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு தொடர்பான சாட்சிகளை வழங்குமாறு மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments