கடற்படையின் கல்வீச்சுக்கு இலக்காகி கடற்தொழிலாளர் காயம்


இலங்கை கடற்படையினர்  இராமேஸ்வர மீனவர்கள் மீது  கற்களை  வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று  முன்தினம் திங்கட்கிழமை மாலை  மீன் பிடிப்பதற்கு அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக்  கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள்  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்  கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்  கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில்  அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில்  மத்திய, மாநில உளவு பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments