உண்மையினை அறியக்கேட்கும் சஜித்!
அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் புலனாய்வுத் துறையை மேற்கோள்காட்டி,இந்நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு வெடிப்புச் சம்பவ சூழல் ஏற்படக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் புலனாய்வுத் துறையை மேற்கோள்காட்டி,இந்நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு வெடிப்புச் சம்பவ சூழல் ஏற்படக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும்,இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதனால் அனைத்து கட்சிகளையும்,தரப்புகளையும் உடனடியாக அழைத்து இது உண்மையா பொய்யா என்பதை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Post a Comment