வாகரை பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு இடையில் மோதல்


மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது , காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் வாகன சாரதிக்கும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இவ்வாறு கைகலப்பில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


No comments